Img ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: குமார் விஸ்வாஸ் Will fight poll from wherever Rahul Gandhi contests says Kumar Vishwas
புதுடெல்லி, டிச. 30-
டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. முதல்வர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி பாராளுமன்றத் தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு கட்சியிடம் தான்விண்ணப்பித்திருப்பதாகவும், அதுபற்றி கமிட்டி முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித், "அமேதி தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் ராகுல் காந்தியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்கள்" என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய குமார் விஸ்வாஸ், ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சவால் விட்டுள்ளார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிட முடிவு செய்தால், அது வம்சாவழி அரசியலுக்கு எதிரான ஒரு வலுவான தகவலை அனுப்பும் என்றும் விஸ்வாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
...

No comments:
Post a Comment