Monday, 30 December 2013

ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: குமார் விஸ்வாஸ் Will fight poll from wherever Rahul Gandhi contests says Kumar Vishwas

Img ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: குமார் விஸ்வாஸ் Will fight poll from wherever Rahul Gandhi contests says Kumar Vishwas

புதுடெல்லி, டிச. 30-

டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. முதல்வர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி பாராளுமன்றத் தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு கட்சியிடம் தான்விண்ணப்பித்திருப்பதாகவும், அதுபற்றி கமிட்டி முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித், "அமேதி தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் ராகுல் காந்தியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய குமார் விஸ்வாஸ், ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சவால் விட்டுள்ளார்.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிட முடிவு செய்தால், அது வம்சாவழி அரசியலுக்கு எதிரான ஒரு வலுவான தகவலை அனுப்பும் என்றும் விஸ்வாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

...

Sunday, 22 December 2013

Arya produces Amara Kaviyam

Img Arya produces Amara Kaviyam
Arya produces Amara Kaviyam
» » Arya produces Amara Kaviyam Arya produces Amara Kaviyam December 22nd, 2013 | | Tags: Amara, Arya Jeeva Shankar who had earlier directed Naan is now directing a film titled Amara Kaviyam. Arya's younger brother Sathya is donning the lead role. Thambi Ramaiah is donning an important role in this film. Mia is pairing with Sathya. The story of this romantic film pertains to 1980s. 80% shooting of Amara Kaviyam has been completed. Arya is producing this film. Arya was upset after seeing the portions of the film shot. Arya who did not wanted to see a flop took advice from his close director friends. One of them told Arya, "Let the portions shot remain. You can act in the balance sequences and manage." So Arya will be acting in the climax sequences of this film.
...

Wednesday, 18 December 2013

Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women

Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women 5 பெண்களை கொன்ற காமக் கொடூரனுக்கு 5 ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்டு தீர்ப்பு Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women

புதுக்கோட்டை, டிச.19-

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வேலுஅம்பலம் மகன் குப்புசாமி (வயது 36). இவர், கடந்த 9.4.2009-ந் தேதியன்று அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நமணசமுத்திரம் அருகில் உள்ள தெற்கு தாளம்பட்டியை சேர்ந்த அஞ்சலை(19) என்ற பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து 17.5.2009-ந் தேதி உடையாளிப்பட்டி அருகே உள்ள சாத்தினிபட்டியை சேர்ந்த செல்வம் என்கிற செல்லம்மாள் (65) என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த 3 கிராம் தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் 5.6.2009-ந் தேதி விராலிமலை கோட்டைகாரன்பட்டியை சேர்ந்த வள்ளிக்கண்ணு(38) என்ற பெண் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரை கற்பழித்து கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும் புத்தாம்பூரை சேர்ந்த திருவாயி (40) என்ற பெண் அருகில் இருந்த குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 8 கிராம் தங்க சங்கிலியை பறித்ததோடு, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். அன்றைய தினமே புத்தாம்பூரை சேர்ந்த கருப்பாயி (70) என்ற மூதாட்டி புத்தாம்பூர் தபால் நிலையத்தில் இருந்து ரூ.400 பணத்தை எடுத்துக்கொண்டு நடந்து வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை வழிமறித்து, அவர் கையில் இருந்த ரூ.400 பணத்தை பறித்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த 5 கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குப்புசாமியை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் நேற்று தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், 5 கொலை செய்த குற்றத்திற்காக குப்புசாமிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 5 ஆயுள் தண்டணையும், கொலை மற்றும் கற்பழிப்பிற்கு தலா 10 வருட சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையாக மொத்தம் ரூ.11 ஆயிரமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
...

Thursday, 12 December 2013

Supreme Court against the judgment of homosexuality review must be filed p Chidambaram interview ஓரினச்சேர்க்கை எதிராக, சீராய்வு மனு தாக்கல் - ப.சிதம்பரம்

Img ஓரினச்சேர்க்கை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி Supreme Court against the judgment of homosexuality review must be filed p Chidambaram interview

புதுடெல்லி, டிச.13-

'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல' என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது.

'இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது' என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இது தொடர்பாக நேற்று கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தவறானது. ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் ஆராயப்படும். இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனு அல்லது நிவாரண மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், தற்போதைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகளை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 என்பது 1860-ம் ஆண்டு வந்ததாகும். இது அந்தக்காலத்திய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகள், உளவியல், உடற்கூறு, மரபணுவியல் சார்ந்ததாக, மிக மோசமானதாக அமைந்தது.

இப்போது மனித உளவியல், மனித உடற்கூறு, மனித மரபணுக்கூறு ஆகியவை பற்றிய அறிவு வளர்ந்திருக்கிறது. இதுதான் இன்றைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடு ஆகும். எனவே இதுதான் இன்றைய சட்ட மதிப்பீடும் ஆகும். எனவே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காலாவதியான ஒன்று. அதை முழுமையாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"டெல்லி மாணவியை ஒரு காமுக கும்பல் கற்பழித்து கொன்றபோது, கற்பழிப்பு சட்டங்கள் திருத்தப்பட்டன. அப்போது அரசு ஏன் இந்திய தண்டனைச்சட்டத்தின் 377-வது பிரிவை திருத்தவில்லை?" என்று ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டுவந்திருந்தது. இரு நபர்களின் சம்மத ஓரினச்சேர்க்கை, அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்றுதான் கூறப்பட்டிருந்தது.

எனவே 377-வது இந்திய தண்டனை சட்டப்பிரிவை திருத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 தொடரலாம். ஏனெனில், சம்மதமில்லாமல் இரு நபர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது என்பது இப்போதும் குற்றம்தான். எனவே அந்த சட்டப்பிரிவில் திருத்தம் செய்யும் நிலை நேரிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில், பாராளுமன்றம் உரிய முடிவை எடுக்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோன்று, 'டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை மீண்டும் திரும்பக்கொண்டு வரும் வகையில் எல்லா வாய்ப்புகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.

இரு நபர்களின் சம்மத ஓரினச்சேர்க்கையை கிரிமினல் குற்றம் அல்ல என்ற நிலையை ஏற்படுத்துவோம்' என்று மத்திய சட்ட மந்திரி கபில்சிபல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
...

Wednesday, 11 December 2013

ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Andhra MPs to win the confidence bjp support Advani Interview

Img ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Andhra MPs to win the confidence bjp support Advani Interview

புதுடெல்லி, டிச.12-

தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா? என்பது பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அத்வானி கூறியதாவது:-

ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் முதலில் எங்களிடம் ஆதரவு கேட்டனர். இன்று (நேற்று) காலை, நாங்கள் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்கள் வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எம்.பி.க்கள் பலத்தை திரட்டி வருவதாக தெரிவித்தனர்.

முதலில், அந்த தீர்மானத்தை ஆதரிக்க விரும்பினோம். ஆனால், தீர்மான வாசகங்களை படித்துப்பார்த்த பிறகு, அதில் மறுபரிசீலனை அவசியம் என்றுகருதுகிறோம். ஏனென்றால், அது ஒருவரி தீர்மானம். அதில், விவாதத்துக்கு இடம் இல்லை. மேலும், தெலுங்கானா மாநிலம் உருவாக்க எங்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

எனவே, மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று கருதி உள்ளோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.பி.க்கள், தங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இதற்கு முன்பு நடந்தது இல்லை.

அதே சமயத்தில், இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவிடாமல், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. சபையில் அமளி நிலவும் போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.

இதை கருத்தில் கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் சபைக்கு வராதவாறு காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது, அச்சம் அளிக்கும் சூழ்நிலை ஆகும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.
...

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் Kerala state public places smoking fine

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்      Kerala state public places smoking fine

Tuesday, 10 December 2013

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை தடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை Dr.Ramadoss report should prevent discrimination against Tamils in Singapore

Img சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை தடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை Dr.Ramadoss report should prevent discrimination against Tamils in Singapore

சென்னை, டிச. 10–

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்று முன்நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

லிட்டில் இந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உள்ளிட்ட 25 இந்தியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் சோதனையிடும் காவல்துறையினர் அங்கு தமிழர் எவரேனும் இருந்தால் கைது செய்து வருகின்றனர்.

சிங்கப்பூர் பொது அமைதிக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் நாடு ஆகும். பொது இடங்களில் வன்முறையோ, கலவரமோ நடக்காத அளவுக்கு சட்டம்– ஒழுங்கை சிங்கப்பூர் பாதுகாத்து வருகிறது. அப்படிப்பட்ட நாட்டில் கலவரம் வெடித்தது வருந்தத்தக்கது.

சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் நாடு என்ற வகையில், இக்கலவரத்திற்கு காரணமானோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.

அதேநேரத்தில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வீடுவீடாகத் தேடி, தமிழரை கைது செய்வதும், விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதும் முறையல்ல. சட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் நாடு என்று கூறிக்கொள்ளும் சிங்கப்பூர், சட்டத்திற்கு எதிராக அப்பாவிகளை சிறைபிடிப்பதும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கும் என்று அச்சுறுத்துவதும் கண்டிக்கத் தக்கவை.

சிங்கப்பூர் காவல் துறையின் நடவடிக்கைகளால் அங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அஞ்சி வீடுகளுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு மலேசியா விடமிருந்து பிரிந்த போது சாதாரணமான நாடாக இருந்த சிங்கப்பூர், இன்று உலகின் பொருளாதார சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதற்கு தமிழர்களின் கடுமையான உழைப்பு தான் முக்கிய காரணம் ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தமிழினத்தை கடுமையாக அவமதிக்கும் செயலாகும்.

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தாறுமாறாக ஓடிய பேருந்து மோதியதால் அப்பாவி தமிழர் ஒருவர் உயிரிழந்ததால் தான் வன்முறை வெடித்தது.

சிங்கப்பூரில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாலும், பெரும்பான்மையினராக உள்ள சீனர்களின் சீண்டல்களாலும் மனம் புழுங்கிப் போயிருந்த தெற்காசியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியது தான் கலவரம் வெடிக்கக் காரணம் ஆகும். தெற்காசியர்களின் மனப்புழுக்கத்திற்கு மருந்து போடாமல் இது போன்ற ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே, இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள அனைத்து தமிழர்களையும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தாமல், உடனே விடுதலை செய்வதற்கு இந்திய தூதரகம் மூலமாக மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த தமிழக இளைஞர் சக்திவேல் குமாரவேலுவின் உடலை விரைவாக சொந்த ஊர் கொண்டுவரவும், அவரது குடும்பத்திற்கு போதிய இழப்பீடு பெற்றுத் தரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

Monday, 9 December 2013

BJP has won 408 out of 589 seats, which is near 70% of the total seats

The Final Tally- BJP has won 408 out of 589 seats, which is near 70% of the total seats. Phenomenal! Congress shrunk - only 21% of seats. This is a wonderful beginning towards success in our Mission272+ & for fulfilling the dream of a Congress Mukt Bharat.


People have spoken loud and clear! The verdict has shown yet again that people want development, not corruption & votebank politics. I thank the people for reposing their faith in @BJP4India. We assure you that we will work hard to fulfil your dreams & aspirations

Sunday, 8 December 2013

டெல்லியில் காங்கிரசுக்கு வரலாறு காணாத தோல்வி: ஆம் ஆத்மி யால் கடும் இழப்பு Delhi assembly election Congress failed

Img டெல்லியில் காங்கிரசுக்கு வரலாறு காணாத தோல்வி: ஆம் ஆத்மி யால் கடும் இழப்பு Delhi assembly election Congress failed

புதுடெல்லி, டிச. 8–

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்சி அமைப்பதை பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டுமே எப்போதும் கவுரவமாக கருதுகின்றன. யூனியன் பிரதேசமாக இருந்த டெல்லி 1993–ம் ஆண்டு மாநில அந்தஸ்தைப் பெற்றது. இதையடுத்து அங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது.

டெல்லி மாநிலத்தின் முதல் முதல்–மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகம் பிரகாஷ் பொறுப்பு ஏற்றார். இதையடுத்து 1993 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. பா.ஜ.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் குரானா, வர்மா, சுஷ்மா சுவராஜ் என 3 பேர் முதல்–மந்திரி பதவியை வகித்தனர்.

இதனால் டெல்லி மக்களிடம் பா.ஜ.க. மீது அதிருப்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1998–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்–மந்திரியாக ஷீலா தீட்சித் பதவி ஏற்றார்.

2003 மற்றும் 2008–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லியில் ஷீலா தீட்சித் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இது டெல்லி மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருப்பதை உறுதிபடுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாதபடி இருந்தது.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது அலை, அலையாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் போன்றவை காங்கிரஸ் மீது எதிர்ப்பு அலைகளை உண்டாக்கியது.

இந்த ஊழல்களை ஒழிக்க லோக்பால் மசோதா கொண்டு வரக் கோரி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் டெல்லி மக்களை தட்டி எழுப்புவதாக இருந்தன. பல்லாயிரக்கணக்கான டெல்லி மக்கள் திரண்டு வந்து அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டதும், அத்தியா வசியப் பொருட்கள் விலைவாசி உயர்ந்ததும் டெல்லி காங்கிரஸ் அரசு மீது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளுக்கு மாற்றாக ஆம் ஆத்மி எனும் புதிய கட்சியை சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கினார். இவர் அன்னா ஹசாரேயின் வலது கரமாக திகழ்ந்தவர் என்பதால் டெல்லி மக்கள் இவர் தொடங்கிய புதிய கட்சிக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தனர்.

ஆம் ஆத்மி கட்சிக்கு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி, அள்ளி கொடுத்தனர். இதனால் தைரியம் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில சட்டசபையின் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

விளக்குமாறு சின்னத்தை பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 70 தொகுதிகளிலும் முகாமிட்டு பிரசாரம் செய்தார். அவருக்கு மக்களிடம் பெரும் எழுச்சி காணப்பட்டது. இந்த எழுச்சி பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளில் எந்த கட்சியை அதிகம் பாதிக்கும் என்று கணிக்க முடியாதபடி இருந்தது.

கருத்து கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு அதிக இடம் கிடைக்கும். ஆம் ஆத்மி கட்சிக்கு 2–வது இடம் கிடைக்கும். காங்கிரஸ் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்று கூறின. இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட்ட போது அது சரியாக இருந்தது.

இன்று பகல் 11.30 மணிக்கு 70 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்த போது, பா.ஜ.க. 34 தொகுதிகளில் வெற்றி முகத்துடன் ஆட்சி அமைப்பதை உறுதி செய்து விட்டது. இதன் மூலம் டெல்லியில் காங்கிரசிடம் இருந்த 15 ஆண்டு கால ஆட்சியை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. இந்த புதிய கட்சியின் அபரிதமான திடீர் எழுச்சி, தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு வரலாறு காணாத தோல்வியைக் கொடுத்துள்ளது.

கடந்த தேர்தலில் 43 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை 7 இடமே கிடைக்கும் என்ற பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மாநில காங்கிரசுக்கு இத்தகைய மோசமான படுதோல்வி ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை.

காங்கிரஸ் கட்சி இந்த தடவை 36 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது. இதில் 27 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சியும், 9 தொகுதிகளை பா.ஜ.க.வும் கைப்பற்றியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலனவர்கள் தோல்வியைத் தழுவி உள்ளனர். தங்களுக்கு தோல்வி ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் எல்லாருமே எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் இப்படி ஒரு மோசமான, சம்மட்டி அடியான படுதோல்வியை தலைநகரில் மக்கள் பரிசாக தருவார்கள் என்று சோனியா உள்பட யாருமே எதிர்பார்க்க வில்லை. ஆம் ஆத்மியின் விளக்குமாறு காங்கிரசை துவைத்து தூரப் போட்டு விட்டது.

...

Saturday, 7 December 2013

பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல்: குற்றவாளி தும்கூரில் கைது? Bangalore ATM attack Suspect held from Tumkur

Img பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல்: குற்றவாளி தும்கூரில் கைது? Bangalore ATM attack Suspect held from Tumkur

தும்கூர், டிச. 7-

பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 19-ம் தேதி காலையில் பணம் எடுக்க சென்ற கார்ப்பரேசன் வங்கியின் மேலாளர் ஜோதி உதய், அரிவாளால் கடுமையாக தாக்கப்பட்டார். அவரிடம் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம மனிதனை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூர் எ.டி.எம்-மில் தாக்குதல் நடத்தியவனின் உருவத்தை போன்ற ஒரு நபர் கடந்த 11, 12-ம் தேதிகளில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பி.எஸ்.யூ. வங்கியின் ஏ.டி.எம். மில் இரண்டு முறை பணம் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அனந்தபூர் தர்மாவரம் நகரில் கடந்த 10-ம் தேதி அன்று ஒரு வயதான பெண்மணியை கொன்று ஏ.டி.எம்-கார்டையும் பறித்துசென்றவனும், பெங்களூரில் தாக்குதல் நடத்தியவனும் ஒரே ஆளாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் தீவிரமாக தேடி வந்தனர்.

இதையடுத்து அந்த குற்றவாளி ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நாரயணன் ரெட்டி என்பது தெரியவந்தது. அவனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில் சந்தேகத்திற்குரிய அந்த குற்றவாளி பெங்களூர் அருகே உள்ள தும்கூரில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தும்கூர் போலீசார் தெரிவித்துள்ளனர். 
...

Friday, 6 December 2013

விபசார விடுதியில் கர்ப்பம் தரித்த எய்ட்ஸ் நோயாளியின் 19 வார கருக்கலைப்புக்கு டெல்லி ஜகோர்ட் அனுமதி Delhi HC permits abortion of HN infected teenager

Delhi HC permits abortion of HN infected teenager
புதுடெல்லி, டிச.7-

டெல்லி விபச்சார தடுப்பு போலீசார் கடந்த மாதம் புதுடெல்லியில் உள்ள பல்வேறு விபசார விடுதிகளில் திடீர் ரெய்டு நடத்தினர்.

அங்கு தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பல இளம்பெண்களை கைது செய்து டெல்லியில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இவர்களில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) தொற்று இருப்பதாக தெரிவித்த அந்த இளம்பெண் எதிர்பாராத விதமாக உருவாகி, வயிற்றுக்குள் வளர்ந்து வரும் கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என காப்பக நிர்வாகிகளுக்கு அந்த பெண் கோரிக்கை விடுத்தார்.

அரசு அதிகாரிகள் இதற்கு அனுமதி வழங்காததால் தனது நோயை காரணம் காட்டி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.

அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்விக்க டெல்லி அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா? என மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

மாநில அரசும் தடை ஏதுமில்லை என பதில் அளித்தது.

இதனையடுத்து, இந்த வழக்கை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதி மனுதாரரை பரிசோதித்து இன்னும் 3 நாட்களுக்குள் கருக்கலைப்பு செய்வது தொடர்பாக முடிவெடுக்கும்படி டெல்லி தீண்தயாள் உபாத்யாயா அரசு
ஆஸ்பத்திரி சூப்பிரண்ட்ருக்கு உத்தரவிட்டார்.

கருவின் வளர்ச்சி நிலை 19 வாரத்தை கடந்து விட்டதால் சிகிச்சையின் போது அந்த பெண்ணுக்கு உரிய மருந்து, மாத்திரைகளும் சத்தான உணவும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் மாநில அரசுக்கு டெல்லி ஐகோர்ட் நீதிபதி சுனிதா குப்தா அறிவுறுத்தினார்.
...

நெல்சன் மண்டேலா இறுதிச்சடங்கு 15 ம் தேதி நடக்கிறது: சொந்த ஊரில் உடல் அடக்கம் Nelson Mandela funeral to be held on Dec 15

நெல்சன் மண்டேலா இறுதிச்சடங்கு 15 ம் தேதி நடக்கிறது: சொந்த ஊரில் உடல் அடக்கம்      Nelson Mandela funeral to be held on Dec 15

Wednesday, 4 December 2013

All schools instructed to install surveillance cameras

பள்ளிகளில் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவு      all schools instructed to install surveillance cameras

டெல்லி பெண் பிரீத்தி ரதி திராவகம் வீசி கொலை: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை தொடக்கம் Delhi girl Preeti Rathi murder case Mumbai Crime Branch investigating start

டெல்லி பெண் பிரீத்தி ரதி திராவகம் வீசி கொலை: மும்பை குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை தொடக்கம்      Delhi girl Preeti Rathi murder case Mumbai Crime Branch investigating start

Tuesday, 3 December 2013

கேரளாவில் பேஸ் புக்கில் வெளியான ஜெயில் கைதிகளின் படங்கள் kerala face book jail Prisoners image

Img

திருவனந்தபுரம், டிச.3–

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயில்கள் தற்போது உல்லாச விடுதிகளாக மாறி வருவதாக கேரள அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

குறிப்பாக விசாரணை கைதிகளாக இருப்பவர்களுக்கு ஜெயிலில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் அவர்கள் அங்கிருந்தபடி அனைத்து விதமான சவுகரியங்களையும் அனுபவிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

இதை மாநில அரசு மறுத்து வந்த நிலையில் நேற்று மலையாள தொலைக்காட்சியொன்றில் கோழிக்கோடு மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் சில கைதிகள் ஜெயிலில் தங்களுடன் இருப்பவர்களுடன் ஜாலியாக செல்போனில் சிரித்து பேசியபடி இருந்த காட்சிகள் வெளியானது.

இந்த காட்சிகள் அந்த கைதிகளின் பெயரில் தொடங்கப்பட்ட பேஸ்புக்கில் இருந்து எடுக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு அந்த அளவுக்கு சவுகரியங்கள் ஜெயிலில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

டெலிவிஷனில் வெளியான காட்சிகள் கோழிக்கோடு ஜெயிலில் எடுக்கப்பட்டவை. அந்த புகைப்படங்களில் இருந்தவர்கள் கோழிக்கோடு சந்திரசேகரன் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் கிர்மானி மனோஜ், கொடி சுனி, முகமது ஷாபி, அனுப், சினோஜ் ஆகியோர் இருந்தனர்.

முகம்மது ஷாபி செல்போனில் பேசியபடி இருக்கும் காட்சியும், கிர்மானி, அனுப் ஆகியோர் ஜெயிலில் உள்ள மற்ற கைதிகளுடன் ஜாலியாக எடுத்துக்கொண்ட குரூப் போட்டோவும், ஷாபி, கிர்மானி ஆகியோர் பெர்முடா அணிந்த படி ஜெயில் சுவரில் சாய்ந்து நிற்கும் காட்சியும் இருந்தன.

இந்த படங்கள் செல்போன் காமிராவில் பதிவு செய்யப்பட்டு பின்னர் அது பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படங்கள் வெளியானதும் கேரள ஜெயில் அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஜெயிலுக்குள் போன் பேசுவதே தவறு என்ற நிலையில் அங்கிருந்தபடி செல்போன் மூலம் படம் எடுத்து அதனை எப்படி பேஸ்புக்கில் ஏற்றினார்கள் என்று ஜெயில் உயர் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக உடனடி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு ஜெயில் துறை டி.ஜி.பி.சிவதாஸ் உத்தரவிட்டார். இதையடுத்து ஏ.டி.ஜி.பி. அலெக்சாண்டர் ஜேக்கப் கோழிக்கோடு ஜெயிலுக்கு சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் இச்சம்பவம் பற்றி கேரள உள்துறை மந்திரியிடமும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் இன்று கோழிக்கோடு ஜெயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை கண்டுபிடித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

...

Monday, 2 December 2013

கருப்பையை அகற்றச் சென்ற பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள் UK Doctors leaves surgical gloves inside while womb removal

கருப்பையை அகற்றச் சென்ற பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்      UK Doctors leaves surgical gloves inside while womb removal

நாளை டெல்லி சட்டசபை தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு Security beefed up ahead of Delhi polls

நாளை டெல்லி சட்டசபை தேர்தல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு      Security beefed up ahead of Delhi polls

வங்க கடலில் காற்றழுத்த பகுதி தீவிரம்: புயலாக மாற வாய்ப்பு Pressure area intensity tamilnadu Cyclone likely to become

வங்க கடலில் காற்றழுத்த பகுதி தீவிரம்: புயலாக மாற வாய்ப்பு      Pressure area intensity tamilnadu Cyclone likely to become

Sunday, 1 December 2013

தொழில் அதிபர் பைசூல் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டேன்: நடிகை ராதா மீண்டும் ஆவேசம் Entrepreneur takes action Actress Radha Obsession

தொழில் அதிபர் பைசூல் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டேன்: நடிகை ராதா மீண்டும் ஆவேசம்      Entrepreneur takes action Actress Radha Obsession

Popular Posts