Img பெங்களூர் ஏ.டி.எம். தாக்குதல்: குற்றவாளி தும்கூரில் கைது? Bangalore ATM attack Suspect held from Tumkur
தும்கூர், டிச. 7-
பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் கடந்த 19-ம் தேதி காலையில் பணம் எடுக்க சென்ற கார்ப்பரேசன் வங்கியின் மேலாளர் ஜோதி உதய், அரிவாளால் கடுமையாக தாக்கப்பட்டார். அவரிடம் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு கொள்ளையடித்து சென்ற அந்த மர்ம மனிதனை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூர் எ.டி.எம்-மில் தாக்குதல் நடத்தியவனின் உருவத்தை போன்ற ஒரு நபர் கடந்த 11, 12-ம் தேதிகளில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் பி.எஸ்.யூ. வங்கியின் ஏ.டி.எம். மில் இரண்டு முறை பணம் எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அனந்தபூர் தர்மாவரம் நகரில் கடந்த 10-ம் தேதி அன்று ஒரு வயதான பெண்மணியை கொன்று ஏ.டி.எம்-கார்டையும் பறித்துசென்றவனும், பெங்களூரில் தாக்குதல் நடத்தியவனும் ஒரே ஆளாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து அந்த குற்றவாளி ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த நாரயணன் ரெட்டி என்பது தெரியவந்தது. அவனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சந்தேகத்திற்குரிய அந்த குற்றவாளி பெங்களூர் அருகே உள்ள தும்கூரில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக தும்கூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
...

No comments:
Post a Comment