Monday, 30 December 2013

ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: குமார் விஸ்வாஸ் Will fight poll from wherever Rahul Gandhi contests says Kumar Vishwas

Img ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: குமார் விஸ்வாஸ் Will fight poll from wherever Rahul Gandhi contests says Kumar Vishwas

புதுடெல்லி, டிச. 30-

டெல்லியில் 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. முதல்வர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை தோற்கடித்த ஆம் ஆத்மி கட்சி பாராளுமன்றத் தேர்தலிலும் தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு கட்சியிடம் தான்விண்ணப்பித்திருப்பதாகவும், அதுபற்றி கமிட்டி முடிவு செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித், "அமேதி தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் ராகுல் காந்தியை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய குமார் விஸ்வாஸ், ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக சவால் விட்டுள்ளார்.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும், அவ்வாறு போட்டியிட முடிவு செய்தால், அது வம்சாவழி அரசியலுக்கு எதிரான ஒரு வலுவான தகவலை அனுப்பும் என்றும் விஸ்வாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

...

Sunday, 22 December 2013

Arya produces Amara Kaviyam

Img Arya produces Amara Kaviyam
Arya produces Amara Kaviyam
» » Arya produces Amara Kaviyam Arya produces Amara Kaviyam December 22nd, 2013 | | Tags: Amara, Arya Jeeva Shankar who had earlier directed Naan is now directing a film titled Amara Kaviyam. Arya's younger brother Sathya is donning the lead role. Thambi Ramaiah is donning an important role in this film. Mia is pairing with Sathya. The story of this romantic film pertains to 1980s. 80% shooting of Amara Kaviyam has been completed. Arya is producing this film. Arya was upset after seeing the portions of the film shot. Arya who did not wanted to see a flop took advice from his close director friends. One of them told Arya, "Let the portions shot remain. You can act in the balance sequences and manage." So Arya will be acting in the climax sequences of this film.
...

Wednesday, 18 December 2013

Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women

Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women 5 பெண்களை கொன்ற காமக் கொடூரனுக்கு 5 ஆயுள் தண்டனை: மகிளா கோர்ட்டு தீர்ப்பு Mahila Court judgement 5 life sentences to youth for molested and murder of 5 women

புதுக்கோட்டை, டிச.19-

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் வேலுஅம்பலம் மகன் குப்புசாமி (வயது 36). இவர், கடந்த 9.4.2009-ந் தேதியன்று அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நமணசமுத்திரம் அருகில் உள்ள தெற்கு தாளம்பட்டியை சேர்ந்த அஞ்சலை(19) என்ற பெண்ணின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து 17.5.2009-ந் தேதி உடையாளிப்பட்டி அருகே உள்ள சாத்தினிபட்டியை சேர்ந்த செல்வம் என்கிற செல்லம்மாள் (65) என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த 3 கிராம் தோடு மற்றும் மோதிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

மற்றொரு சம்பவத்தில் 5.6.2009-ந் தேதி விராலிமலை கோட்டைகாரன்பட்டியை சேர்ந்த வள்ளிக்கண்ணு(38) என்ற பெண் மாடு மேய்த்து கொண்டிருந்த போது, அவரை கற்பழித்து கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

மேலும் புத்தாம்பூரை சேர்ந்த திருவாயி (40) என்ற பெண் அருகில் இருந்த குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றபோது அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 8 கிராம் தங்க சங்கிலியை பறித்ததோடு, அவரது கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளார். அன்றைய தினமே புத்தாம்பூரை சேர்ந்த கருப்பாயி (70) என்ற மூதாட்டி புத்தாம்பூர் தபால் நிலையத்தில் இருந்து ரூ.400 பணத்தை எடுத்துக்கொண்டு நடந்து வரும் போது அவரை பின் தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை வழிமறித்து, அவர் கையில் இருந்த ரூ.400 பணத்தை பறித்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இந்த 5 கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குப்புசாமியை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் நேற்று தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், 5 கொலை செய்த குற்றத்திற்காக குப்புசாமிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 5 ஆயுள் தண்டணையும், கொலை மற்றும் கற்பழிப்பிற்கு தலா 10 வருட சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையாக மொத்தம் ரூ.11 ஆயிரமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
...

Thursday, 12 December 2013

Supreme Court against the judgment of homosexuality review must be filed p Chidambaram interview ஓரினச்சேர்க்கை எதிராக, சீராய்வு மனு தாக்கல் - ப.சிதம்பரம்

Img ஓரினச்சேர்க்கை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்: ப.சிதம்பரம் பேட்டி Supreme Court against the judgment of homosexuality review must be filed p Chidambaram interview

புதுடெல்லி, டிச.13-

'ஓரினச்சேர்க்கை குற்றமல்ல' என்று டெல்லி ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த தீர்ப்பினை ரத்து செய்தது.

'இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377-ன்கீழ் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம்தான், அந்த சட்டப்பிரிவு இருக்கிறவரை ஓரினச்சேர்க்கையை குற்றம் அல்ல என்று கோர்ட்டு கூற முடியாது' என சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இது தொடர்பாக நேற்று கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு தவறானது. ஏமாற்றம் அளிக்கிறது. இதை சரி செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் ஆராயப்படும். இந்த தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யுமாறு சீராய்வு மனு அல்லது நிவாரண மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில், தற்போதைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகளை சுப்ரீம் கோர்ட்டு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரிவு 377 என்பது 1860-ம் ஆண்டு வந்ததாகும். இது அந்தக்காலத்திய சமூக, நல்லொழுக்க மதிப்பீடுகள், உளவியல், உடற்கூறு, மரபணுவியல் சார்ந்ததாக, மிக மோசமானதாக அமைந்தது.

இப்போது மனித உளவியல், மனித உடற்கூறு, மனித மரபணுக்கூறு ஆகியவை பற்றிய அறிவு வளர்ந்திருக்கிறது. இதுதான் இன்றைய சமூக, நல்லொழுக்க மதிப்பீடு ஆகும். எனவே இதுதான் இன்றைய சட்ட மதிப்பீடும் ஆகும். எனவே சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காலாவதியான ஒன்று. அதை முழுமையாக திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

"டெல்லி மாணவியை ஒரு காமுக கும்பல் கற்பழித்து கொன்றபோது, கற்பழிப்பு சட்டங்கள் திருத்தப்பட்டன. அப்போது அரசு ஏன் இந்திய தண்டனைச்சட்டத்தின் 377-வது பிரிவை திருத்தவில்லை?" என்று ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது:-

ஐகோர்ட்டு தீர்ப்பு இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377-ஐ ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கொண்டுவந்திருந்தது. இரு நபர்களின் சம்மத ஓரினச்சேர்க்கை, அந்தரங்கமாக மேற்கொள்கிற ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்றுதான் கூறப்பட்டிருந்தது.

எனவே 377-வது இந்திய தண்டனை சட்டப்பிரிவை திருத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 377 தொடரலாம். ஏனெனில், சம்மதமில்லாமல் இரு நபர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது என்பது இப்போதும் குற்றம்தான். எனவே அந்த சட்டப்பிரிவில் திருத்தம் செய்யும் நிலை நேரிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில், பாராளுமன்றம் உரிய முடிவை எடுக்கும் என்று பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோன்று, 'டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பை மீண்டும் திரும்பக்கொண்டு வரும் வகையில் எல்லா வாய்ப்புகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.

இரு நபர்களின் சம்மத ஓரினச்சேர்க்கையை கிரிமினல் குற்றம் அல்ல என்ற நிலையை ஏற்படுத்துவோம்' என்று மத்திய சட்ட மந்திரி கபில்சிபல் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
...

Wednesday, 11 December 2013

ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Andhra MPs to win the confidence bjp support Advani Interview

Img ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Andhra MPs to win the confidence bjp support Advani Interview

புதுடெல்லி, டிச.12-

தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா? என்பது பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அத்வானி கூறியதாவது:-

ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் முதலில் எங்களிடம் ஆதரவு கேட்டனர். இன்று (நேற்று) காலை, நாங்கள் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்கள் வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எம்.பி.க்கள் பலத்தை திரட்டி வருவதாக தெரிவித்தனர்.

முதலில், அந்த தீர்மானத்தை ஆதரிக்க விரும்பினோம். ஆனால், தீர்மான வாசகங்களை படித்துப்பார்த்த பிறகு, அதில் மறுபரிசீலனை அவசியம் என்றுகருதுகிறோம். ஏனென்றால், அது ஒருவரி தீர்மானம். அதில், விவாதத்துக்கு இடம் இல்லை. மேலும், தெலுங்கானா மாநிலம் உருவாக்க எங்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

எனவே, மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று கருதி உள்ளோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.பி.க்கள், தங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இதற்கு முன்பு நடந்தது இல்லை.

அதே சமயத்தில், இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவிடாமல், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. சபையில் அமளி நிலவும் போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.

இதை கருத்தில் கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் சபைக்கு வராதவாறு காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது, அச்சம் அளிக்கும் சூழ்நிலை ஆகும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.
...

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் Kerala state public places smoking fine

கேரள மாநிலத்தில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்      Kerala state public places smoking fine

Tuesday, 10 December 2013

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை தடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை Dr.Ramadoss report should prevent discrimination against Tamils in Singapore

Img சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை தடுக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை Dr.Ramadoss report should prevent discrimination against Tamils in Singapore

சென்னை, டிச. 10–

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் நேற்று முன்நாள் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

லிட்டில் இந்தியா பகுதியில் வெடித்த கலவரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிங்கப்பூர் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த பலர் உள்ளிட்ட 25 இந்தியர்களையும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளையும் சோதனையிடும் காவல்துறையினர் அங்கு தமிழர் எவரேனும் இருந்தால் கைது செய்து வருகின்றனர்.

சிங்கப்பூர் பொது அமைதிக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் நாடு ஆகும். பொது இடங்களில் வன்முறையோ, கலவரமோ நடக்காத அளவுக்கு சட்டம்– ஒழுங்கை சிங்கப்பூர் பாதுகாத்து வருகிறது. அப்படிப்பட்ட நாட்டில் கலவரம் வெடித்தது வருந்தத்தக்கது.

சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தும் நாடு என்ற வகையில், இக்கலவரத்திற்கு காரணமானோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.

அதேநேரத்தில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் வீடுவீடாகத் தேடி, தமிழரை கைது செய்வதும், விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதும் முறையல்ல. சட்டத்தை செம்மையாக செயல்படுத்தும் நாடு என்று கூறிக்கொள்ளும் சிங்கப்பூர், சட்டத்திற்கு எதிராக அப்பாவிகளை சிறைபிடிப்பதும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கும் என்று அச்சுறுத்துவதும் கண்டிக்கத் தக்கவை.

சிங்கப்பூர் காவல் துறையின் நடவடிக்கைகளால் அங்குள்ள தமிழர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட அஞ்சி வீடுகளுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர். 1965 ஆம் ஆண்டு மலேசியா விடமிருந்து பிரிந்த போது சாதாரணமான நாடாக இருந்த சிங்கப்பூர், இன்று உலகின் பொருளாதார சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்திருப்பதற்கு தமிழர்களின் கடுமையான உழைப்பு தான் முக்கிய காரணம் ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தமிழினத்தை கடுமையாக அவமதிக்கும் செயலாகும்.

லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல. தாறுமாறாக ஓடிய பேருந்து மோதியதால் அப்பாவி தமிழர் ஒருவர் உயிரிழந்ததால் தான் வன்முறை வெடித்தது.

சிங்கப்பூரில் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாலும், பெரும்பான்மையினராக உள்ள சீனர்களின் சீண்டல்களாலும் மனம் புழுங்கிப் போயிருந்த தெற்காசியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தியது தான் கலவரம் வெடிக்கக் காரணம் ஆகும். தெற்காசியர்களின் மனப்புழுக்கத்திற்கு மருந்து போடாமல் இது போன்ற ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே, இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும். கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மீதமுள்ள அனைத்து தமிழர்களையும் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தாமல், உடனே விடுதலை செய்வதற்கு இந்திய தூதரகம் மூலமாக மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த தமிழக இளைஞர் சக்திவேல் குமாரவேலுவின் உடலை விரைவாக சொந்த ஊர் கொண்டுவரவும், அவரது குடும்பத்திற்கு போதிய இழப்பீடு பெற்றுத் தரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

...

Popular Posts