Wednesday, 11 December 2013

ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Andhra MPs to win the confidence bjp support Advani Interview

Img ஆந்திர எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா?: அத்வானி பேட்டி Andhra MPs to win the confidence bjp support Advani Interview

புதுடெல்லி, டிச.12-

தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், இந்த தீர்மானத்தை பா.ஜனதா ஆதரிக்குமா? என்பது பற்றி பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அத்வானி கூறியதாவது:-

ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும் முதலில் எங்களிடம் ஆதரவு கேட்டனர். இன்று (நேற்று) காலை, நாங்கள் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவர்கள் வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எம்.பி.க்கள் பலத்தை திரட்டி வருவதாக தெரிவித்தனர்.

முதலில், அந்த தீர்மானத்தை ஆதரிக்க விரும்பினோம். ஆனால், தீர்மான வாசகங்களை படித்துப்பார்த்த பிறகு, அதில் மறுபரிசீலனை அவசியம் என்றுகருதுகிறோம். ஏனென்றால், அது ஒருவரி தீர்மானம். அதில், விவாதத்துக்கு இடம் இல்லை. மேலும், தெலுங்கானா மாநிலம் உருவாக்க எங்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்தது.

எனவே, மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று கருதி உள்ளோம். இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.பி.க்கள், தங்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது இதற்கு முன்பு நடந்தது இல்லை.

அதே சமயத்தில், இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவிடாமல், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. சபையில் அமளி நிலவும் போது, நம்பிக்கையில்லா தீர்மானத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.

இதை கருத்தில் கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் சபைக்கு வராதவாறு காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இது, அச்சம் அளிக்கும் சூழ்நிலை ஆகும்.

இவ்வாறு அத்வானி கூறினார்.
...

No comments:

Post a Comment

Popular Posts